மரண அறிவித்தல்

திரு சீனியர் இராசா (ஓய்வுபெற்ற- காங்கேசந்துறை சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்)

தோற்றம்: 10 ஒக்ரோபர் 1928   -   மறைவு: 24 யூன் 2017
யாழ். மயிலிட்டி மயிலியோடையைப் பிறப்பிடமாகவும், இளவாலை வடக்கு வேரவலை வசிப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீனியர் இராசா அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற நாகமுத்து, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியம்(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,

இரவீந்திரன்(செயலாளர்- கல்வி பண்பாட்டலுவல்கள், மற்றும் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் வடமாகாணம்), ரஜனி(சுன்னாகம்), இராமச்சந்திரன்(பொறியிலாளர்- லண்டன்), ரிஷிந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை, சின்னத்தம்பி, பார்வதி, லட்சுமி, இராசதுரை, துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரோகினி(ஆசிரியர்- சைவப்பிரகாச வித்தியாசாலை, வவுனியா), ஆனந்தகுமார்(கோட்டைக் கல்விப்பணிப்பாளர்- தெல்லிப்பழை), அருணா(முன்னாள் ஆசிரியை – மத்திய கல்லூரி வசாவிளான்- லண்டன்), மலர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கீர்த்தன்(பொறியிலாளர்- மாத்தறை), லவகீர்த்தன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலய உயர்தர மாணவர்), பவகீர்த்தன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலய உயர்தர மாணவர்), வேதாகுலன்(யாழ் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர்), இலாவண்யா(யாழ்/வேம்படி மகளிர் உயர்தரபாடசாலை உயர்தரமாணவி), அருண்ராம், அபிராம், அபிநயா(லண்டன்), அஜீர்த்தனன், சஜீர்த்தனன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2017 அன்று பருத்தியோலை வீதி, மயிலணி, சுன்னாகம் என்னும் இடத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்
கைப்பேசி : +94773868588
ரஜனி
தொலைபேசி : +94213210902
ராமச்சந்திரன்
தொலைபேசி : +442085510410