கனடாச் செய்திகள்

கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டியில் இலங்கையின் சகீ லதீப் உயர் விருதான முதல் 10 சிறந்த புத்தாக்க விருதுடன் தங்க பதக்கம் மற்றும் விஷேட விருது வென்று சாதனை

International Invention & Innovation Competition In Canada - 2020 இல் குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் எம். டீ. எம். சகீ லதீப் இன் Arogya Herbal (சர்ம நோய்களுக்கு சிகிற்சை) Paste to Treat ...

மேலும்..

கணவரை நாயை போல சங்கிலியால் கட்டி அழைத்து சென்ற பெண்!

ஊரடங்கு விதிமுறையிலிருந்து கணவனை காப்பாற்ற 'நாய்' என கூறி ஆனவரை வாக்கிங் அழைத்து சென்ற பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..! இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ...

மேலும்..

கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் ஊரடங்கு- மீறுவோருக்கு கடும் அபராதம்

கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அந்நாட்டு நேரப்படி இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது, கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்து 23ஆயிரத்து நூறுக்கும் ...

மேலும்..

யாழ். பல்கலை வளாகத்தில் அமைந்திருந்த தமிழர் நினைவுத்தூணை அழிக்க எடுக்கப்பட்ட முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்!

இலங்கை  அரசினால் 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத் தூபி இலங்கை அதிகாரிகளாலும் தகர்த்தழிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபியானது, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் இன ...

மேலும்..

டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்: 4 பேர் பலி; 52 பேர் கைது

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ஆம் திகதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பைடன் பொறுப்பேற்க ...

மேலும்..

கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை மூடப்படும்

கொரோனாத் தொற்றுப் பரவலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் அடங்கும். இந்நிலையில் கனடாவில் தற்போது கொரோனாத் தொற்றின் 2ஆவது அலை தீவிரமாகப் பரவிவருகின்றது. அதன்படி ,தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான ...

மேலும்..

கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம்…

கோவிட் -19 தடுப்பூசி விநியோக பணிக்குழுவில் ஒன்பது உறுப்பினர்களை நியமிப்பதாக ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் கனடிய பாதுகாப்புப் படைத் தலைவரான ஜெனரல் ரிக் ஹில்லியர் தலைமையிலான இப்பணிக்குழு, கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம், பராமரிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்பார்வையிடும். மேற்படி பணிக்குழு, தொழிற்பாடுகள் மற்றும் உபகரணங்கள், மத்திய, மானில மற்றும் பூர்வீககுடிகள் தொடர்பான உறவுகள், சுகாதாரம், நோய்த்தடுப்பு, தகவல் தொழிநுட்பம், தரவுகள் போன்றவற்றுக்கான நிபுணத்துவ நெறிமுறைகளை அரசுக்கு வழங்குவதற்கு அமைச்சகங்களுடன் இணைந்து செயற்படும். இப்பணிக்குழு பல முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதுடன், குறிப்பாக விநியோகம், உபகரணங்கள் தொடர்பான நிர்வாகம், மருத்துவ ரீதியிலான வழிகாட்டுதல், பொதுமக்களுக்கான அறிவூட்டுதல் மற்றும் அது தொடர்பான மேம்படுத்தல் போன்றவற்றில் உடனடியாகவே செயற்பட ஆரம்பிக்கும். இன்று காலை, ஜெனரல் ஹில்லியர் அவர்கள் முதல் 100,000 தடுப்பூசி விநியோகம் குறித்த பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினார். இப்பணிக்குழு தடுப்பூசி பெறுவதற்கான முன்னுரிமையைப் பெறும் மக்களைப் பற்றி விவாதிப்பதற்கான அதன் ஆரம்பக் கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு நடத்துகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஃபோர்ட் அவர்கள் பங்கேற்பதால், இன்று பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை அவர் நடத்த மாட்டார். விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ - றூஜ் பார்க்

மேலும்..

கோவிட் – 19 விரைவுப் பரிசோதனை & கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்வதற்கென மேலதிக மருத்துவ படுக்கைகள்…

கோவிட் - 19 விரைவுப் பரிசோதனை கோவிட்-19 நோய்த்தொற்று அதிகமாய் பரவும் இடங்கள், கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் விரைவான பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விரைவுப் பரிசோதனை நடவடிக்கையானது மருத்துவத்துறையின் முன்னணிக் களப் பணியாளர்களைப் பாதுகாக்க உதவுதுடன், ...

மேலும்..

பிரதமர் வி.உருத்திரகுமாரன் கனேடிய தமிழ் ஊடக சந்திப்பு…

இன்று கனேடிய நேலம் மாலை 7 மணிக்கு இடம்பெற இருக்கின்ற பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக சந்திப்பில் பங்கெடுக்க பதிவு செய்ய தவறியவர்கள் குறித்த இந்த இணைப்பின் ஊடாக பங்கெடுத்துக் கொள்ளலாம். TGTE Canada Media

மேலும்..

இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது ...

மேலும்..

காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனேடியப் பிரதமர் தலையிடவேண்டும் – தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை!!

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடாப் பிரதமர் நீக்க ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது.

உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது. மானிலமஙெ்கும் உளநலம் மற்றும் சில பழக்கங்களுக்கு அடிமையானோர் தொடர்பான சேவைக்களுக்கென ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 14.75 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இது குறித்த விபரங்களை முதல்வர் டக் போர்ட்டும், உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான இணை அமைச்சர் மைக்கல் ...

மேலும்..

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா – மனிதநேய உதவிகள்(photos)!

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா மனிதநேய உதவிகள் வழங்கும் பணியின் ஊடாக 54 தாய்மாருக்கான உலர் உணவுப்பொதிகள் ஒவ்வொன்றும் 1300 ரூபாய்கள் பெறுமதியானது வழங்கிவைக்கப்பட்டது, இதேவேளை உறவுகளுக்கு கைகொடுப்போம் அமைப்பும் 12 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை அன்றைய தினம் ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் | புதிய கல்வியாண்டின் தொடக்கம்.

புதிய கல்வியாண்டின் தொடக்கம் செப்டெம்பர் மாதம் புதிய கல்வியாண்டை நாம் ஆரம்பிக்கும் இவ்வேளையில், மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளதை நான் அறிவேன்.  புதிய கல்வி ஆண்டின் ஆரம்பமானது இம்முறை மிகவும் வித்தியாசமானதாக அமையவுள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், அவற்றின் சிறப்புகளை எட்டவும் இந்த ஆண்டு வழிவகுக்கும். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது தமது குழந்தைகள் பாதுகாப்புடன்கூடிய கல்விச் சூழலில் தமது வகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் என்ற மன நிறைவை பெற்றோர்கள்  அடைவர். ஒன்ராறியோவின் பள்ளிகள் மீளத் திறக்கப்படும்போது பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முதன்மையான விடயங்கள் பின்வருமாறு: அனைத்துஊழியர்களும் மாணவர்களும் ஒவ்வொரு நாளும் தாங்கள் பள்ளிக்குச் செல்லும் முன்னர் தமக்கான நோய் அறிகுறி பற்றிய சுய பரிசோதனையினை மேற்கொள்ளல் அவசியம். தமது உடல்நிலை சரியில்லை என உணர்ந்தால், அவர்கள் பள்ளிக்குச் செல்லாது வீட்டிலேயே இருத்தல் வேண்டும். கொவிட்-19நோய்த்தொற்று உள்ளதென சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ, பள்ளி நிர்வாகம் உடனடியாக அதுபற்றி அப்பகுதிக்கான பொது சுகாதார பிரிவுக்கு அறிவித்தல் வேண்டும். சந்தேகத்துக்குரிய அல்லது உறுதிப்பட்டுத்தப்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகளை ஒவ்வொரு நாளும் கல்விச்சபை பள்ளிச் சமுகத்துக்கும் ஒன்ராறியோ அமைச்சகத்துக்கும் அறிவித்தல் வேண்டும். நான்காம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வகுப்பறைகள், நுழைவாயில் பகுதி உட்பட பாடசாலை கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மூன்றாம் வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்படாவிட்டாலும்,  அவர்களும் முகக்கவசம் அணிவது சிறந்தது என ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு கருவிகளை வழங்குவதற்கு ஒன்ராறியோ மானிலம் பள்ளி நிர்வாக உதவி நிதியை அளிக்கிறது. மாணவர்களுக்குவேண்டிய சுகாதார விதிமுறைகளைப் பயிற்றுவிப்பதுடன், கை கழுவுதல் பற்றியும் அதற்கான இடைவேளைகளையும் பாடசாலை நிர்வாகம் வழங்கும். ஆசிரியர்களும் பள்ளிப் பணியாளர்களும் மேலதிகமான சுகாதார பாதுகாப்பு பயிற்சியை பெற்றுக்கொள்வர். ஒவ்வொருமாணவரும் பள்ளியில் நாள் முழுவதும் முடிந்தவரை ஒரே குழுவில் குறிப்பிட்ட ஆசிரியருடன் பயில ஊக்குவிக்கப்படுவர். மேலதிகமான ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதற்கென பணியில் அமர்த்தப்படுவர். பள்ளிகளுக்குஉடனடியாக உதவுவதற்கென 625 வரையான புதிய பொது சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் நோய்த்தடுப்பு, நோய்ப் பரிசோதனை, நோய்த்தொற்றைக் கண்டறிந்து அதற்கான தணிப்பு உத்திகளைக் கையாள்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். அனைத்துப்பாடசாலைகளும் நாள் முழுவதும் சுத்தம் செய்யப்படுவதை கவனித்துக்கொள்வதற்கென 1300 வரையான பாதுகாப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வேண்டிய துப்புரவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்துகளும் தவறாமல் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்உட்பட பள்ளிக்கு வருகை தருபவர்களுக்கான கட்டுப்பாடுகளை பாள்ளி நிர்வாகம் விதிக்கும். தரவுகளைப்பேணும் வகையில், மாணவர்களின் வருகைப் பதிவுகள், வகுப்பறையில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கை விபரங்கள், பேருந்தில் வருகை தரும் மாணவர்களின் விபரங்கள், அனுமதி பெற்று பாடசாலைக்கு வருவோர் விபரங்கள், தற்காலிக ஆசிரியர்களின் விபரங்கள் போன்றவற்றை பள்ளி நிர்வாகம் சேகரித்து வைத்திருக்கும். பெற்றோர்களின்தெரிவுகளுக்கு மதிப்பளிக்கப்படும். 2020-2021 கல்வியாண்டின்போது  அனைத்து நிலை பாடசாலைகளிலும் நேரடியாக மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிப்பது அவர்களின் விருப்பத் தெரிவாக அமையும். வகுப்புகளுக்கு நேரடியாக சமூகமளிக்காது வெளியில் இருந்து கல்வி பயிலக்கூடிய பல வசதிகளை ஆண்டு முழுவதும் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லும்வேளையில்,பெற்றோர்களும் ஆசிரியர்களும்  சமுகத்தில் உள்ள பள்ளிகளிலும் குழந்தை பராமரிப்பு மையங்களிலும், கொவிட்-19 தொற்றுகளை விரைவாக கையாள்வதற்கு ஏதுவான சூழ்நிலையை நாம் உறுதிப்படுத்துகிறோம்.      

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது!!!

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது 06-09- 2020_அன்று மொன்றியால் ...

மேலும்..