பிரதான செய்திகள்

25 லட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமையவேண்டும்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் எதிர்பார்ப்பு இது

வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய முடியும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சுற்றுலாப் ...

மேலும்..

பொதுத் தேர்தலே மொட்டுவின் தெரிவு வியூகத்துடன் மார்ச் வருகிறார் பஷில்! உதயங்க வீரதுங்க கூறுகிறார்

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க, அதற்கான வியூகத்துடன் பஷில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுஜனபெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் ...

மேலும்..

முலைத்தீவு – தேராவில் குளத்து மேலதிக நீரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான தீர்வு பணிகள்

தேராவில் குளத்து மேலதிக நீரால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ள நீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி மோட்டார் சைக்கிள் எரிப்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி  செல்வது அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது. முன்பகை காரணமாகவே ...

மேலும்..

போதை அடங்கிய மாத்திரைகளுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை  பகுதியில்  50 லட்சம் ரூபா பெறுமதியான  2180  போதை  மாத்திரைகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை  இவர் கைது செய்யப்பட்டார் எனக் கொழும்பு வடக்கு  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதான கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் ...

மேலும்..

‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ கொழும்பில் நூல்வெளியீட்டு விழா

(அஸ்ஹர் இப்றாஹிம்) எழுத்தாளர் முஹம்மட் சாலிஹீன் எழுதிய ' வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வளிமண்டலவியல் கேட்போர் கூடத்தில் நூலாசிரியரின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ...

மேலும்..

இன்றுடன் நிறைவடைந்தது தேசிய சாரணர் ஜம்போரி

! எம். எப். றிபாஸ் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தாவது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (திங்கட்கிழமை)யுடன் முடவடைந்துள்ளதது. பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரீத் பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற இச்சாரணர் தேசிய ஜம்போயில் இலங்கை நாட்டின் ...

மேலும்..

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

  மறைந்த புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் அவர்களின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ...

மேலும்..

வவுனியா உமாமகேஸ்வரன் சமாதி அருகில் புளொட் மூத்த தலைவர் உடல் அடக்கம்!

வவுனியா, கோவில்குளம், சிவன் கோவிலருகில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சமாதி அருகில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த தலைவர் ராகவனின் உடலும் இன்று (25.02) அடக்கம் செய்யப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ...

மேலும்..

நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் ஜே.வி.பி, ஐ.ம.சவுக்கு கிடையாது என்கிறார் நிமல் லான்சா

  நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் 'புதிய கூட்டணி' முன்னோக்கி செல்வதாக, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் லான்சா இக்கருத்தை வெளியிட்டார். இங்கு மேலும் கருத்து ...

மேலும்..

புதிய கூட்டணியின் ஹை பார்க் கோணர் பேரணிக்கு மக்கள் வெள்ளம் திரண்டது!

  புதிய கூட்டணி பேரணி ஹை பார்க் கோணரில் நடந்தது. அரசாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க மற்றும் மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல்மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ் ஆகியோர் ...

மேலும்..

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு தெல்லிப்பழை  மகாஜனா தெரிவு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி  தகுதிபெற்றுள்ளது. அனுராதபுரத்தில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ ...

மேலும்..

கண்டல் தாவரங்களை நடுவது தொடர்பான ஆய்வு செய்தல் திருகோணமலை மாவட்டத்தில்!

மூதூர் நிருபர்) திருகோணமலை மாவட்டத்தின் கரையோரமாகவுள்ள தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் கண்டல் தாவரங்கள் நடுவது  தொடர்பான ஆய்வுக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மூதூர் , வெருகல்  ,கிண்ணியா ,திருகோணமலை  குச்சவெளி மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளுக்கு கள விஜயம்செய்து கண்டல் தாவரங்களை நடுவது பற்றிய ...

மேலும்..

இலவச சீருடை; இலவச புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தல்!

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் மற்றும் காரைதீவு கோட்டங்களைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கு  இலவச சீருடையும் இலவசப் புத்தகங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது. நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாசார மண்டபத்தில்  பாடசாலை அதிபர் எம்.டீ.நௌபல் அலி தலைமையில் ...

மேலும்..

உள்ளூர் பிரமுகர்களுடன், உல்லாச பயணிகளையும் கவர்ந்த யாழ். உடல், உள ஆரோக்கிய சதுக்கம்!

  யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் சிகரம் நிறுவனத்தின் படலை:வடக்கு மாகாண சுற்றுலா சேவை பிரிவு நடத்திய உடல்-உள ஆரோக்கியத்துக்கான பௌர்ணமி கூடல் நிகழ்வு, உள்ளூர் பிரமுகர்கள் முதல் உல்லாசப் பயணிகள் வரையில் ஏராளமானவர்களை ஈர்ப்பதாக நடைபெற்றிருந்தது. பெப்ரவரி 23 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் மாலை 4.30 மணிக்கு பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ...

மேலும்..