பிரதான செய்திகள்

கல்முனையில் திண்மக் கழிவகற்றலை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

  (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரில் திண்மக் கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழனன்று நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் அமைப்பின் ...

மேலும்..

கட்சியின் இருப்பை காப்பதற்காக பதவி துறந்தார் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர்

தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாக குழுத்தெரிவுக்கு எதிராக நீதிமன்றத்தால் பெறப்பட்ட தடை உத்தரவு மற்றும் மகாநாட்டை நடத்துவது தொடர்பான கட்டாணைகள் பெறப்பட்ட வழக்கு இன்று திருமலை மாவட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள திரு சுமந்திரன் அவர்களை தவிர ...

மேலும்..

இணைந்து போவாரா எம்.ஏ. சுமந்திரன்?

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்;படி வழக்குத் தாக்கல் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு ...

மேலும்..

தமிழரசுக் கட்சித் தடைகளைத் தகர்க்க தவராஜா தலைமையிலான குழு களத்தில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிய தலைவர் மற்றும்; முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாடு என்பவற்றுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த ...

மேலும்..

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சிக்காக திருகோணமலையில் இருந்து புறப்படுகிறார் தன்வந்!

ஹஸ்பர் ஏ.எச் இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு புதன்;கிழமை காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிட்ட ஹரிஹரன் தன்வந், மார்ச் மாதம் முதலாம் திகதி ...

மேலும்..

பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமைக்குரிய பழீல் ஆசிரியரின் இழப்பு பெரும் கவலையளிக்கிறது இரங்கல் செய்தியில் ஹரீஸ் எம்.பி.

நூருல் ஹூதா உமர் அரசறிவியல் முதுநிலை பட்டதாரியும், சிரேஷ்ட ஆசிரியருமான ஏ.சி.எம் பழீல் காலமான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். எனது உறவுமுறை காரராகவும் இருக்கும் லொஜிக் பழீல் என்று அழைக்கப்படும் பழில் ஆசிரியர் எல்லோராலும் அன்புடன் நேசிக்கப்பட்ட ஒருவர். குறிப்பாக ...

மேலும்..

ஊழியர்களின் போராட்டம் காரணமாக  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

நூருல் ஹூதா உமர் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாள்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள்  ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன. நிறைவேற்று உத்தியோகத்தகள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பாறுக் ஷிஹான் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாள்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு  இணங்க, நாட்டில் ...

மேலும்..

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வருடாந்த அணிவகுப்பு மரியாதை பரிசோதனை

பாறுக் ஷிஹான் 2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு  புதன்கிழமை கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. ...

மேலும்..

பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்துக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்துக்குட்பட்ட சந்திரகாந்தன் வித்தியாலய நிர்வாகம் மற்றும் கல்விச் சமூகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் ஒன்றுகூடல்  மண்டபத்திற்கான தளபாடங்களும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. ...

மேலும்..

அம்பாறை மாவட்ட செயலக கணக்காளராக ஐ.எம் பாரீஸ்

(சர்ஜுன் லாபீர்) அம்பாறை மாவட்ட செயலாளரின் உள்ளக இடம்மாற்றத்திற்கிணங்க  நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட  இலங்கை கணக்காளர் சேவை தரம் 01ஐ சேர்ந்த எஸ்.எல் ஐ.எம் பாரீஸ் புதன்கிழமை அம்பாறை கச்சேரியில் புதிய கணக்காளராக கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்   தமயந்த விஜய ஸ்ரீக்குக் கௌரவமளிப்பு!

2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு புதன்கிழமை காலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது அங்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகளும்,கட்சிப் பிரமுகர்களும் மக்கள் உணர்வறிந்து செயற்பட வேண்டும்!  உதுமாலெப்பை அறிவுறுத்து

கே எ ஹமீட் மக்கள் பிரதிநிதிகளும், கட்சிப் பிரமுகர்களும் கட்சிக் கட்டமைப்பை செயற்படுத்தி மக்களின் காலடிக்குச் சென்று கட்சி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், மக்களின் உணர்வுகளையும் அறிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான ...

மேலும்..

சுமந்திரன் எம்.பியின் தாயாருக்கு தமிழ் சி.என்.என். நிர்வாகி அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் காலமானார். அன்;னாரின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் நிர்வாக இயக்குநருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி இன்று (புதன்கிழமை) நேரில் ...

மேலும்..

தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறுகளில் விடுமுறை வழங்குக! அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களிற்கு விடுமுறை வழங்கி அறநெறிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய குறித்த பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. அங்கு ...

மேலும்..