உலகச் செய்திகள்

முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்!

தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக, ...

மேலும்..

கனடாவில் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு கோரியவருக்கு நேர்ந்த சோகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நபர் ஒருவர் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு சைகை செய்ததற்காக அவர் மீது சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 65 வயதான குறித்த நபர் நாயுடன் வீதியில் நடந்து சென்ற போது, வேகமாக சென்ற வாகனமொன்றை பார்த்து மெதுவாக செல்லுமாறு ...

மேலும்..

உக்ரைனுக்கு செல்லும் இஸ்ரேலிய அமைச்சர்!

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் எலி கோஹென் இன்று உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் உக்ரேனுக்கு இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் விஜயம் செய்கின்றமை இதுவே முதல் தடவையாகும். உக்ரேனிய ஜனாதிபதி ஸேலென்ஸ்கி வெளிவிவகார அமைச்சர் திமிதிர் குலேபா ஆகியோரை ...

மேலும்..

2023ம் ஆண்டின் முதல் கோடீஸ்வரர் இவர் தான்! கூரையை பிய்த்து கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்

முதல் முயற்சியிலேயே 33 கோடி ரூபா பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் பிரஜை துபாயில் லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றின் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 33 கோடி ரூபா பண பரிசினை வென்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் ...

மேலும்..

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளான லெகாஸ்பி நகர், ...

மேலும்..

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 1,500 பேர் பலி!

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 6,000 இற்கும் ...

மேலும்..

சீனா தனது கொள்கைகளை மாற்ற வேண்டும் – IMF பணிப்பாளர் கோரிக்கை

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்தியாவில் இடம்பெறும் கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, ...

மேலும்..

துருக்கியில் 7.8 ரிக்டர் நிலநடுக்கம் – 500 பேர் பலி!

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் ...

மேலும்..

அமெரிக்க வான் பரப்பில் பறந்தது உளவு பலூன் அல்ல; ஆகாயக் கப்பல் – சீனா விளக்கம்

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற இராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தைக் கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்தப் பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ...

மேலும்..

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ...

மேலும்..

வடகொரியாவில் அதிபர் கிம் விடுத்த அதிரடி உத்தரவு!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் 124 போ் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியானதாக அந்த நாட்டு பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆப்கானிஸ்தான் பெண்கள் ...

மேலும்..

புதிய பிரதமர் பதவி ஏற்றார்!

நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ...

மேலும்..

ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்த வேண்டாம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவுரை

உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ தாக்குதல் நடவடிக்கையானது கிட்டத்தட்ட ஒரு வருடங்களை தொடவிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் அத்துமீறிய தாக்குதல்களை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ...

மேலும்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக ...

மேலும்..