பொலிஸ்மா அதிபர் மற்றும் விசேட அதிரடி படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் சிஐடியில் முன்னிலை
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் விசேட அதிரடி படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை