பசிலின் கைகளில் ரணிலின் ஆட்டம்!!

அதிகாரம் தொடர்ந்தும் பசில் ராஜபக்சவிடமே உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

ஹம்பாந்தொட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“நாட்டின் சகல தரப்பினரும் இன பேதமின்றி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

பசிலின் கைகளில் ரணிலின் ஆட்டம்!!

 

ஆனால், நாடாளுமன்றில் கட்சிக்கு ஒரு ஆசனத்தைக் கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராகியுள்ளார். அவர் ராஜபக்ஷ குடும்பத்தினரை பாதுகாப்பதற்காகவே பிரதமராகியுள்ளார்.

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் வழங்கும் ஆதரவின் காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளது.

எனினும் பசில் ராஜபக்ஷ ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் பிரதமர் பதவியிழக்க நேரிடும்” என்றார்.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.