நுணாவில் பகுதியில் மினிவான் மோதி மோட்டார்சைக்கிளில் சென்றவர் காயம்.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை அண்மித்து நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் 23/05 திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொடிகாமம்-யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் மினிபஸ்-மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.