கடவுச்சீட்டுகளைப் பெற முன்பதிவு செய்யவும் -திணைக்களம்
கடவுச்சீட்டுகளைப் பெற முன்பதிவு செய்யவும் -திணைக்களம்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெறுபவர்களுக்கு முன் பதிவு செய்துவிட்டு திணைக்களத்துக்கு வருகை தருமாறு மீண்டும் தெரிவித்துள்ளது.
மே 17 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பலர் முன் நியமனம் இன்றி வருகை தருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டுக்கும் முன்பதிவு செய்த நபர்களுக்கு மாத்திரமே சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது 0707 101 060 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ நியமனங்களை மேற்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்தச் சேவைகள் வழங்கப்படும்.
கருத்துக்களேதுமில்லை