ஜுன் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கிய பாத யாத்திரை

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கிய பாத யாத்திரை எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

கதிர்காம கந்தன் ஆலய திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்தியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையானது வருடாவருடம் இடம்பெற்று வந்த நிலையில் கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பாதயாத்திரை இடம்பெறாத நிலையில் இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் மட்டக்களப்பிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையில் பயணிக்கவுள்ளதுடன், அவர்கள் குழுவாகவும் தனியாகவும் பாதயாத்திரையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகின்றது.

பிரதான பாதயாத்திர குழுவினர் எதிர்வரும் 04.06.2022 காலை 8.00 மணிக்கு தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து தமது பாதயாத்திரையினை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதேவேளை, கதிர்காம கந்தனின் ஆடி மகா உற்சவம் ஆடி மாதம் 28ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஆவணி மாதம் 11ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.