சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தாமே குறித்த சிறுமியைக் கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.