காரைதீவில் இடம்பெற்ற பாலின வன்முறை தடுப்பு செயலணி குழுக்கூட்டம் !

நூருல் ஹுதா உமர்

நாட்டில் ஆங்காங்கே பல்வேறு பாலின வன்முறை சம்பவங்கள் பதிவாகிவரும் சூழ்நிலையில் காரைதீவு பிரதேச செயலக சிறுவர்  பெண்கள் அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்திருந்த காரைதீவு பிரதேச பாலின வன்முறை தடுப்பு செயலணி குழுக்கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், மதுவரி திணைக்கள உத்தியோகத்தர் ,சிறுவர் நன்நடத்தை திணைக்கள உத்தியோகத்தர், தொழில் அலுவலக உத்தியோகத்தர் , கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர், தொழிற்பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களில் இருந்தும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேசத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.