பா.உ அமரகீர்த்தி அத்துகோரள மரணம் தொடர்பில் மற்றுமொருவர் கைது!

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.