இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகம்; எரிசக்தி அமைச்சர்

இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த 40,000 மெட்ரிக் தொன் ஒக்டென் 92 ரக பெற்றோலுடனான எரிபொருள் தாங்கி கப்பல், நாளைய தினமே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே, நாடளாவிய ரீதியில் இன்று மற்றும் நாளைய தினங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதியளவு ஒட்டோ டீசல் கையிருப்பில் உள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் முழுமையாக டீசல் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், சுப்பர் டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.