எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் சுவ செரிய சேவை இடைநிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் அவசர அம்பியுலன்ஸ் சேவையை இடைநிறுத்தியுள்ளதாக 1990 சுவ செரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது.
நேற்று (10) மாலை 4.00 மணி முதல் சேவை இடைநிறுத்தப்பட்டதாக அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது . எனவே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பின்வரும் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் தமது சேவை இடம்பெறாது என சுவசேரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இப்பகுதிகளில் மக்கள் ஏனைய சேவைகளை நாடுமாறும் கோரப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.