ஒமிக்ரோனிலிருந்து பாதுகாப்பு பெறுவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருங்கள்-சுகாதார அமைச்சு

-சி.எல்.சிசில்-

தற்போது இந்தியா முழுவதும் பரவி வரும் Omicron 2.75 ரக கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இனிமேலாவது தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நோய் பரவினால் அது தொடர்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆசிரியர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில்  இந்த வகை பதிவாகவில்லை என்றாலும், முன்கூட்டியே தயார் செய்வது முக்கியம் என்றும் மருத்துவர் அலுத்கே மேலும் குறிப்பிட்டார்.

மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.