ரயில்சேவைகள் குறித்த தகவல்களை பெற தனியான தொலைபேசி இலக்கம்

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் பயணிகள் இலகுவாக தொடர்பு கொள்வதற்காக அவசர இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள், ரயில் அட்டவணைகள் அல்லது பிற தொடர்புடைய தகவல்கள் பற்றிய ஏதேனும் கேள்விகளுக்கு திணைக்களத்தை தொடர்பு கொள்ள விரும்பும் பயணிகள் எந்த நேரத்திலும் 1971 ஐ டயல் செய்வதன் மூலம் தகவல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஹொட்லைன் மூலம் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம். ரயில் இயக்க அட்டவணைகள், இருக்கை முன்பதிவுகள், ரயில் கட்டணம், ரயில்வே பாதுகாப்பு சேவைகளை தொடர்பு கொள்ளுதல் போன்ற சேவைகளை மக்கள் பெறலாம்.
புதிய 24 மணி நேர அவசர எண் நாளை (14) காலை 7.00 மணிக்குப் பிறகு செயல்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.