அனைத்து பல்கலைகழகங்களும் செப்டெம்பர் மாதம் திறக்க நடவடிக்கை-பேராசிரியர் சம்பத் அமரதுங்க

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று (ஆகஸ்ட் 22) காலை பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் பல்கலைக்கழக கற்கைகள் வழமை போன்று மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சில பல்கலைக்கழகங்களில் வழமை போன்று கற்கைகள் மற்றும் பரீட்சைகள் இடம்பெற்று வருவதாகவும் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதில் சிரமமாக உள்ள மாணவர்களுக்கு ஒன்லைன் முறை மூலம் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.