மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் அறிவிப்பு…..

அடுத்த வாரம் விசேட மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை விசேட வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் நிமல்க பன்னில ஹெட்டி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வைத்தியர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. . ஓகஸ்ட் மாதத்தில் நோயாளர்கள் குறைந்தாலும், தற்போது 5,600 ஆக உள்ளது, கடந்த மாதம் 11,500 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

எதிர்வரும் பருவமழை காலத்தில், இந்த நோயாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்

டெங்கு பரவும் இடங்களை அழிப்பதும், அந்தந்த குடியிருப்புகளுக்கு அருகாமையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்காணிப்பதும் மக்களின் பொறுப்பாகும். டெங்கு தடுப்பு வேலைத்திட்டத்தின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றாலும், பொது மக்கள் அதிகப் பங்காற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதைக் குறைக்க முடியும்.

தனியார் மற்றும் அரச அலுவலகக் கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கட்டுமானத் தளங்களுக்கு அருகாமையில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானித்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 36,000 டெங்கு நோயாளர்கள் ,மாத்திரமே பதிவாகியிருந்ததாகவும், ஆனால் 2022 ஆம் ஆண்டில் ஏற்கனவே 52,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அடுத்த நான்கு மாதங்களில் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைக்கும் இலக்கை அடைய முடியாது என்றும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.