செப்டம்பர் முதல் வாரத்தில் கோட்டா நாடு திரும்புவார்!!!!!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்களில் வெளியாகியுள்ளன .அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் ஜனாதிபதியை நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து, ஜனாதிபதி ராஜபக்சே நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்துள்ளார் .

ஜூலை 9 அன்று பதவி விலகக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார். மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்ற அவர் பின்னர் தாய்லாந்துக்கு சென்று தற்போது அங்கு தங்கியுள்ளார். தற்போது அவரது மிரிஹான இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.