முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார்.

ஒரு சில தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார லியனகே தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு நிலவிய மருந்துக்கள் கிடைக்கப்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.