வழக்கை கைவிடுங்கள் -அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதற்காக நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக ஹாமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை, அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் 5.875 சதவீத சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் $250 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருக்கும் ஹாமில்டன் ரிசர்வ் வங்கி, ஜூலை மாதம் முதிர்ச்சியடைந்த தனது பத்திரங்களுக்கு வட்டி மற்றும் ரொக்கத்தை கோரி அந்த மாதம் நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையின் கோரிக்கை
ஒரு வங்கியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு அரசுக்கு எதிராக மற்ற கடனாளிகளை விட சிறப்பு கொடுப்பனவை எதிர்பார்த்து வழக்குத் தாக்கல் செய்ததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அமெரிக்க நீதிமன்றத்தை கோரியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை