சட்டவிரோதமாககொண்டு செல்லப்பட்டமரக்குற்றிகள்சாவகச்சேரிப் பொலிஸாரால் மீட்கப்பட்டிருப்பதுடன்-சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரிப் பொலிஸாரால் 25/09 ஞாயிற்றுக்கிழமை காலை சட்டவிரோதமாக டிப்பர் வாகனத்தில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட 20இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்கப்பட்டிருப்பதுடன்-சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தில் மரக்குற்றிகளை ஏற்றி அதன் மேல் கற்களை பரவி மரக்குற்றிகளை எடுத்து வந்த போதே சாவகச்சேரிப் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.