ஒருவர் கொலை: தந்தை மகன் கைது
ராஜாங்கனை – யாய 17 பகுதியில் தந்தையும் மகனும் இணைந்து மண்வெட்டியால் அருவரை கொலைசெய்துள்ளனர்
அதே பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இவர்கள் மூவரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், இவர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து குறித்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையில், அவர்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தந்தைக்கு 54 வயது, மகனுக்கு 24 வயது.
கருத்துக்களேதுமில்லை