ஆர்ப்பாட்டம்: களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடும் வாகன நெரிசல்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வீதியின் இருபுறமும் மாணவர்களும், பொலிஸாரும் குவிந்திருந்துள்ளனர். குறைந்தது 10 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நீர் பீரங்கிகளும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளுடன் பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.