சாரதி அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அச்சிடப்படும்

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்ப்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக திணைக்களம் பெருமளவிலான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதை இடைநிறுத்தி, குறைந்த எண்ணிக்கையிலான பத்திரங்களை மாத்திரமே வழங்கி வருகிறது.

அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 500,000 அட்டைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சரக்குகளைப் பெற்றவுடன், திணைக்களம் சாரதி பத்திரங்களை அச்சிடுவதை மீண்டும் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்தகைய நபர்களுக்கு தற்போது தற்காலிக சாரதி பத்திரங்கள் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நபர்களுக்கே தற்போது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புதிய அட்டைகள் கிடைத்தவுடன், நிலுவைத் தொகையை நிவர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.