மனதை உருக்கும் கொடுமைக்கு உள்ளாகும் 4 வயது குழந்தை எங்கிருக்கின்றது என கண்டறிய தயவு கூர்ந்து உதவுங்கள்.
மனதை உருக்கும் கொடுமைக்கு உள்ளாகும் இந்த மிக மோசமாக தாக்கப்படும் குழந்தை எங்கிருக்கின்றது என கண்டறிந்து மீட்க தயவு கூர்ந்து உதவுங்கள். ஊர்காவற்றுறையை சார்ந்த இந்த 4 வயது குழந்தையும் வாய் பேச முடியாத 24வயது தாயும் சில வாரங்களின் முன் இவர்களை 3 வருடத்திற்கு மேல் பிரிந்து இருந்த போதைக்கு அடிமையான தந்தையால் அழைத்து செல்லப்பட்டதாகவும் அச்சமயம் தான் தாக்கப்பட்டதாகவும் இக்குழந்தையின் அம்மம்மா ஊர்காவற்றுறை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
தந்தையின் பெயர் ந.சிவச்சந்திரன் பல குற்றங்களிற்கு பொலிசாரால் தேடப்படுபவர். கொடிகாமத்தை சார்ந்த இவர் சுருவிலும் வசித்துள்ளார். இப்போது நல்லூர், திருகோம இடங்களிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது. உறுதிப்படுத்த முடியவில்லை
இக்குழந்தை தாக்கப்படும் காணொளி மற்றும் வாய் பேச முடியாத தாயின் இறப்பு கண்ணீர் அஞ்சலி அடங்கிய முகநூல் பதிவை செவிப்புலனற்றோர் சங்க.த்தை சார்ந்தோர் அம்மம்மாவிடமும் அயலவரிடமும் கரம்பன் மேற்கில் அமைந்துள்ள அவர்கள் வீட்டில் கொண்டு வந்து இன்று காண்பித்துள்ளனர்.
இந்த பிள்ளை தொடர்ந்து சித்ரவதை செய்ய படுவதை தடுக்க தாயாரின் உண்மை நிலையை அறிய பொலிசாருக்கோ ஊர்காவற்றுறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவிற்கோ சுகாதார வைத்திய தாய் சேய் நலப்
பிரிவிற்கோ தகவல் தந்து உதவுங்கள்
கருத்துக்களேதுமில்லை