கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர்பலி!!
கிளிநொச்சி மாவட்ட உமையாள்புர பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாயொருவர் பலியாகியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட உமையாள்புர பகுதியில் நேற்றைய தினம் (09) ஏ9 வீதியில் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த தாயொருவரை பின்னால் வந்த டிலக்சன் சாரதி பயிற்சி நிலையத்தின் சாரதி பயிற்சி வாகனம் மோதி தள்ளியுள்ளது.டிலக்சன் சாரதி பயிற்சி நிலையத்தின் சாரதி யிற்சி வழங்கி கொண்டிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.விபத்தில் இறந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த முகமது நாசிம் யோகலட்சுமி வயது (69) 4 பிள்ளைகளின் தாய் என தெரிய வந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை