யாழ்ப்பாணம்,பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விஜயம்…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர்
இன்றைய தினம்(15) காலை 10 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது துறைமுக அதிகார சபைத் தலைவர், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.

விமான நிலையத்தின் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக மதியம் 12 மணியளவில் பலாலி விமான நிலையத்தில் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.