மீண்டும் ஆரம்பிக்கப்படும் யாழ் விமான நிலைய சேவை – அமைச்சரின் அறிவிப்பு!!

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தந்த காங்கேசன்துறை துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை. இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமேயாக இருந்தால் காங்கேசன்துறை துறைமுகம் போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீளப் புதுப்பித்து அவற்றை செயற்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.

தற்போதுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் காரணமாகவே இன்றைய தினம் காங்கேசன் துறைமுகத்திற்கு நேரடியாக இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினை மேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும் செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். அவ்வாறான வேலை திட்டங்களை ஆரம்பித்து மிக விரைவில் இந்த துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்.

மீண்டும் ஆரம்பிக்கப்படும் யாழ் விமான நிலைய சேவை - அமைச்சரின் அறிவிப்பு | Palali Jaffna Airport Flight Services

 

அதேபோல், பயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமும் எமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும். அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும். ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.