கணித வினாத்தாள்களை தனியார் வகுப்பில் வெளியிட்ட இரு ஆசிரியர்கள் தொடர்பில் விசாரணை

இரண்டாம் தவணைப் பரீட்சையின் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான கணித வினாத்தாள்களை தமது தனியார் வகுப்பு மாணவர்களுக்குப் பகிர்ந்தளித்ததாகக் கூறப்படும் இரு தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் புத்தளம் வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனமடுவ மற்றும் கெதெத்தாவ பிரதேசத்தில் தனியார் வகுப்பு மாணவர்களிடையே இந்த பரீட்சை வினாத்தாள்கள் பகிரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இக்கல்வி வலயத்தின் தவணை பரீட்சையின் கணிதப் பரீட்சை நவம்பர் 30ஆம் திகதி இடம்பெற்றது. இக்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தனியார் வகுப்பு ஆசிரியர்களும் ஆனமடுவ மற்றும் ராஜவிகம ஆகிய இரண்டு அரச பாடசாலைகளின் ஆசிரியர்களாவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.