கார்த்திகை தீபம் : களைகட்டும் யாழ் சந்தைத் தொகுதிகள்

திருக்கார்த்திகை விரத உற்சவத்தினை முன்னிட்டு இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் திருக்கார்த்திகை விளக்கீட்டுக்கான விளக்குகளை கொள்வனவு செய்வதில் பொது மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யாழ். நல்லூர், திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியில் சிறிய சிட்டி விளக்குகள், நிறமூட்டிய விளக்குகள் போன்றவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளன.

திருக்கார்த்திகை விரத உற்சவத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (டிச. 6) கந்தன் ஆலயங்களில் குமராலய சொர்க்கப்பானை தீபமும், நாளை மறுதினம் புதன்கிழமை (டிச. 7) விஷ்ணு ஆலயங்களில் விஷ்ணு சொர்க்கப்பானை தீபமும், வீடுகளில் திருக்கார்த்திகை விளக்குகள் ஏற்றுதலும் இடம்பெறும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.