ஒரு வழக்கில் பிணையில் விடுதலையானார் ஜானகி சிறிவர்தன!

பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தன, ஒரு வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (06) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு வழக்கில் மாத்திரம் அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3 வழக்குகளில் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் திலினி பிரியமாலியை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.