வைரவிழா போட்டிகளைப் பிற்போடல் தொடர்பான அறிவித்தல்

சாவகச்சேரி நிருபர்
அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறவிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த மட்ட போட்டியாளர்களுக்கான சைவசமயப் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டிருப்பதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த போட்டிகள் 24/12 சனி மற்றும் 25/12 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளன.
தனிநிலைப் போட்டிகள் 24/12 சனிக்கிழமையும்,குழு நிலைப் போட்டிகள் 25/12 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளன.
போட்டிகள் வடக்கு மாகாணத்தில் யா/வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்திலும்,
மேல் மாகாணத்தில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும்,கிழக்கு மாகாணத்தில் ம/ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையிலும்,
மத்திய மாகாணத்தில் கண்டி கலைமகள் தமிழ் வித்தியாலயத்திலும் இடம்பெறும் என இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் சி.கா.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.