முதியோர்கள் இலவசமாக இன்று மிருகக்காட்சிசாலையை பார்வையிட வாய்ப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை முதியோர்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு இன்று (24) வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த நாட்களில் மிருகக்காட்சிசாலையின் சுற்றுச்சூழல் கல்வி கண்காட்சியுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.