• முகப்பு
  • செய்திகள்
    • பிரதான செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • கனடாச் செய்திகள்
    • செய்தித் துளிகள்
    • பிரித்தானியச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • சினிமா
  • ஆன்மிகமும் ஜோதிடமும்
    • கிறீஸ்தவச் செய்திகள்
    • இஸ்லாமியச் செய்திகள்
  • விந்தை உலகம்
  • ஏனையவை
    • தொழில் நுட்பம்
    • விளையாட்டு
    • பொதுவானவை
    • மருத்துவம்
  • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்கள்
  • தொடர்பு

யாழ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குப் பத்து மில்லியன் பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடை !

Tweet
December 28th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி
ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது.

இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவால் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 செப்ரெம்பர் மாதம் 11 ஆம் தேதி கனடியத் தமிழர் பேரவையினரால் பதினான்காவது வருடாந்த தமிழ்க் கனடிய நிதிசேர் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதெனத் திட்டமிடப்பட்டது.

இந்த நன்கொடையின் முதற்கட்டமாக கனடியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதல் தொகுதி மருந்துப் பொருட்கள்  செவ்வாய்க்கிழமை 20 ஆம் தேதி, மாலை 4:30 மணியளவில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்குக் கையளிக்கப்பட்டது.

கனடியத் தமிழர் பேரவையின் முன்னாள் இயக்குநர் சபை உறுப்பினர் சிவம் வேலுப்பிள்ளை, சிவபூமி அறக்கட்டளையின் நிறுவனர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) கலாநிதி ஏ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்தியர் ஆர்.சுரேந்திரகுமரன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சி.ஹரிஹரன், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று இடம்பெற்ற மருந்துகளை வழங்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

எதிர்வரும் வாரங்களில் ஏனைய ஐநது மருத்துவமனைகளுக்குமான நன்கெடைகள் கனடிய தமிழ் காங்கிரஸினல் ஒழுங்கமைக்கப்பட்டு  கையளிக்கப்படும்.

Tellipalai Medicine Handover Dec 20 2022 3.jpgTellipalai Medicine Handover Dec 20 2022 4.jpgTellipalai Medicine Handover Dec 20 2022 5.jpgTellipalai Medicine Handover Dec 20 2022 6.jpgTellipalai Medicine Handover Dec 20 2022 8.jpg

அண்மைய செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய்

யாழில் கடத்தலில் ஈடுப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது

அர்ச்சுனா எம்.பி. மீது தாக்குதலா?

சர்ச்சைக்குரிய செயற்பாட்டாளர் டான் பிரசாத் கைது 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

  • Fri, Mar 28
  • Wed, Mar 26
  • Sun, Mar 2
  • Mon, Feb 17
  • Wed, Feb 12
  • Tue, Feb 11
  • Wed, Feb 5

சிறப்புச் செய்திகள்

15 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் .

கல்முனையில் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஒலிம்பிக் தீபம் ஏந்தும் வாய்ப்பு பெற்ற ஈழத் தமிழர்

© 2025 Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs