கொழும்பு காலி முகத்திடலில் ஒன்று திரண்ட பெருமளவான மக்கள்!
பிறந்துள்ள புதுவருடத்தை பல நாடுகளில் உள்ள மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனனர்.
பொருளாதாரப் பாதிப்புக்களுக்கு மத்தியிலும், இலங்கையில் புது வருடக் கொண்டாட்டங்கள் பல இடங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
அந்தவகையில், பிறந்துள்ள 2023ம் ஆண்டை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு, காலி முகத்திடலில் நேற்றிரவு ஒன்று திரண்டு வரவேற்றுள்ளனர்.
பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டு காலி முகத்திடலில் புதிய வருடத்தை வரவேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை