மின் கட்டண உயர்வு IMF கோரிக்கை – நிமல் சிறிபால டி சில்வா

பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் IMF தவணை தொடர்பில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இணங்கத் தவறினால் நாடு சர்வதேச ஆதரவையும் இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விலையேற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை எனவும் அதற்கு பதிலாக பல சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சலுகைகள் தன்னிச்சையாக வழங்கப்பட்டால் சர்வதேச உதவிகள் பெறப்படாது என்றும் கடன் மறுசீரமைப்பும் நடைபெறாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.