கோட்டாபயவின் வீட்டருகில் நிகழவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான, ஜெஸ்வெல் பிளே சந்தியில் தமது கைத்துப்பாக்கியால் சக காவல்துறை உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான காவல் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த காவல்துறை அதிகாரி, பழைய கொட்டாவ வீதியில் உள்ள ஜெஸ்வெல் சந்தியில், மற்றுமொரு கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜென்ட் ஆகியோருடன் வீதியோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரான உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது உறங்கிவிட்டதாகவும், காவல்துறை சார்ஜன்ட் அவருக்கு கடமையில் அக்கறையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூத்த அதிகாரியிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை கேட்டதால் பொறுமை இழந்த காவல்துறை உத்தியோகத்தர், சார்ஜென்ட்டை நோக்கி தமது ரீ-56 ரக துப்பாக்கியில் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழும் முன், அருகிலிருந்து மற்றுமொரு காவல்துறை அதிகாரியால் துப்பாக்கி பறிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரான காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த காவல்துறை உத்தியோகத்தரை நுகேகொட நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.