ஓமான் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்.

ஓமான் – மஸ்கட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் 7 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
யூ.எல். 206 என்ற விமானத்தில் இன்று (8) காலை அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் வென்னப்புவ, திருகோணமலை, கிண்ணியா, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பணிப்பெண்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓமானிலுள்ள இலங்கை தூதுரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் 118 வீட்டுப் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் இலங்கைக்கு திரும்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
எனினும், ஆவணக் கோளாறு காரணமாக அவர்களில் நான்கு பேரால் நாடு திரும்பமுடியாமல்போன நிலையில், எஞ்சிய ஏழு பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.