மொனராகலை SSP தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
கைது செய்யப்பட்ட மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜனவரி 13 ஆம் திகதி வரையில் இவ்வாறு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
350 கஞ்சா செடிகள் மற்றும் நிலத்துக்குள் இருக்கும் பொருட்களை அவதானிக்கக் கூடிய கருவியுடன் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை