தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றஉறுப்பினர்களின் இரண்டு மாத சம்பளத்தை இடைநிறுத்தி பயன்படுத்துங்கள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்றால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை தாமதப்படுத்தி தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதா கிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.