தனித் தமிழ் கட்சியில் தான் இனி தேர்தல்களில் போட்டியிடுவேன் -வியாழேந்திரன்

கிழக்குத் தமிழர்களின் இருப்பை முஸ்லிம் – சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தனித் தமிழ்க் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவேன். எமது இருப்புக்காக நாங்கள் குரல் கொடுப்போம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.