ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் போராட்டம் ஆரம்பம்

 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கருவாத்தோட்டம் பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (08) நிராகரித்துள்ளார்.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டால் பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.