துருக்கி அனர்த்தத்தால் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு!
இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி நாடுககளில் ஒன்றான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கமாகப தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக , இலங்கை தேயிலை சபை நேற்று (7) குறிப்பிட்டுள்ளது.
துருக்கியில் தேயிலை ஏற்றுமதிக்கான ஓர்டர்களைப் பெற்ற இலங்கை வர்த்தகர்கள் இதனால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் தேயிலை சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துர்க்கியேவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 1,000-10,000 கிலோகிராம் வரையிலான தேயிலையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேயிலை சபை அனுப்பி வைக்கவுள்ளது.
துருக்கி வழக்கமாக வாங்கும் தேயிலை வகையின் விலையில் சிறிது சரிவைக் காட்டுவதை நாங்கள் கவனித்தோம். பல துருக்கிய வர்த்தகர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்படவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் வணிகத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும் வரை நமக்கு சிறிய இழப்புகள் ஏற்படலாம். ஆனால் இது அனைத்தும் தற்காலிகமானது என்று நான் நினைக்கிறேன்.
துருக்கிய மக்கள் சிலோன் டீயை விரும்புகிறார்கள். துரதிஷ்டவசமாக, இப்போது, சந்தையில் ஒரு திட்டவட்டமான பின்னடைவு உள்ளது. இது முழு தேயிலை சந்தையையும் பாதிக்காது. Türkiye இல் பிரபலமாக உள்ள தேயிலை வகைகளே பாதிக்கப்படும் என்றார் .
கருத்துக்களேதுமில்லை