யாழில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக போராட்டதில் ஈடுப்பட்ட 18 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ். நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி இன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ். நகரில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தது.

இதனையடுத்து யாழ். நகரில் சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

எனினும் தடை உத்தரவை மீறி இன்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டது.

எனினும் போராட்டம் தொடர்ந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.