எஸ்.ஜி.சேனாரத்னவிற்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக எஸ்.ஜி.சேனாரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (13) காலை கூடிய அரசியலமைப்பு சபை இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக கடமையாற்றிய மோகன் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோர் அண்மையில் இராஜினாமா செய்தனர்.

இராஜினாமா செய்ததன் மூலம் வெற்றிடமாக இருந்த உறுப்பினர் ஒருவருக்குப் பதிலாக எஸ்.ஜி.சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய வெற்றிடத்திற்கு உறுப்பினரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று மீண்டும் கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.