நீதவானின் காரை திருடிய நபர் கைது

குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை கொள்ளையடித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வத்தளை, ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.