தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை- பந்துல குணவர்தன

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய உண்மையான நிதி நிலைமை குறித்து திறைசேரி செயலாளர் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்கள் வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலவிட்டன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.