தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 22-23-24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் திகதி மாத்திரமே தாமதமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் எவரும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.